ஐரோப்பா

ஜேர்மனில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; நால்வர் பலி, 58 பேர் படுகாயம்!

ஜேர்மனி நாட்டின் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது.

செவிலியர்கள் பணியாற்ற கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில், 4 பேர் பலியாகி உள்ளனர். 58 பேர் காயமடைந்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்