உலகம்

பங்களாதேஷில் (Bangladesh) ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 09 பேர் பலி!

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மற்றும் இராசாயனக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டாக்காவின் மிர்பூர் ( Dhakas Mirpur) பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மீட்புப் பணியாளர்கள் குறைந்தது ஒன்பது உடல்களை மீட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் (Talha bin Jashim) தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைத் தொழில் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் (Bangladesh)  உள்ளது. இங்கு சுமார் 04 மில்லியன் மக்கள் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. இருப்பினும் இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்