பொழுதுபோக்கு

“இது எல்லாத்துக்குமே காரணம் அவருதான்…” வைரலாகும் நயன்தாராவின் பேச்சு

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம் அழகு சாதன பொருட்கள் விற்பனை, சானிட்டரி நாப்கின் என தொழிலதிபராக மாறி வருகிறார்.

சமீபத்தில் Femi9 எனும் புதிய வகை பிராண்ட் சானிட்டரி நாப்கினை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அந்த சானிட்டரி நாப்கினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடத்தப்பட்ட விழாவில் நடிகை நயன்தாரா படு போல்டாக பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மேலும், இன்னமும் நம் நாட்டில் பெண்கள் மத்தியில் சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சரியாக சென்று சேரவில்லை என்றே நினைக்கிறேன் என்றும் இந்த பிசினஸ் மூலம் லாபம் வருவது சுயநலம் தான் என்றாலும், அதில் பெண்களுக்கான பொதுநலம் தான் அதிகம் கலந்திருக்கிறது என பஞ்ச் வைத்து பேசி பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது கோமதி மேமை பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன் என பேசிய நயன்தாராவின் பேச்சு தீயாக பரவி வருகிறது.

See also  மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல ஹீரோயின் பிரியங்கா மோகன்..!! ஷாக்கிங் வீடியோ

நடிகை நயன்தாரா சானிட்டரி நாப்கின் பிசினஸ் செய்வது சமூக சேவைக்கா எல்லாம் பணம் சம்பாதிக்கத்தானே என சிலர் சொல்வார்கள். ஆமாம், இதில் சுயநலம் இருக்கு, ஆனால், அதற்கு பின்னால் இருக்கும் பொதுநலம் தான் இங்கே நம்மை எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறது என அதிரடியாக பேசியுள்ளார்.

இதன் மூலம் வரும் லாபம் தனக்கு முக்கியமில்லை என்றும் ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு பெண்களை சென்று சேர்ந்தால் போதும் எனக் கூறியுள்ளார்.

இங்கே நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது என பேசிய நயன்தாரா கணக்கு தப்பா இல்லைன்னா இதுவரை ஒரு கோடி சானிட்டரி நாப்கின்களை விற்றுள்ளோம்.

இந்த சாதனைக்கு நீங்கள் அனைவரும் போட்ட பெரும் உழைப்பு தான் காரணம் என Femi9 ஊழியர்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை ஊக்குவித்து நயன்தாரா பேசியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content