ஐரோப்பா

பிரித்தானியாவில் பல பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு: வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பணியாற்றும் பெண் மருத்துவர்களில் 3 ல் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதும், சிலர் தொந்தரவு செய்யப்பட்டதும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியிடத்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 1,434 பேர் கலந்து கொண்டனர். இதன் முடிவுகள், ‛ பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் சர்ஜரி ‘ இதழில் வெளியிடப்பட்டது.

அதில், 30 சதவீத பெண் டாக்டர்கள், பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

29 சதவீதத்தினர், வேலை செய்யுமிடத்தில் பாலியல் ரீதியாக சீண்டலுக்கு உட்பட்டதாகவும் , 40 சதவீதம் பேர் உடல்ரீதியான விமர்சனத்திற்கு உள்ளானதாகவும், 38 சதவீதம் பேர் கேலி கிண்டலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களுக்கு பதிலளித்த பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கானதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சக ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.

சம்பவங்களைப் புகாரளிப்பது தங்கள் வாழ்க்கையை சேதப்படுத்தும் என்று அஞ்சுவதாகவும், அவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content