இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜூன் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 முதல் 100, 000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் முதல் முறையாக வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முகவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் ஒருவர் 18 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது முறையாக அதே முகவர் நிலையத்தில் ஒப்பந்தம் செய்யும் ஒருவர் 3600 ரூபாவையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!