இலங்கை

தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் போராட்டம்!

உடவல நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி, விவசாயிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று (05.08) 13ஆவது நாளாகவும் தொடர்கிறது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக  சமனல குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் வழங்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் செயற்படும் நீரின் வீதம் 1.4 வீதமாகவே காணப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விவசாயத்திற்கான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!