தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்

சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைப் பலரும் குறைகூறியுள்ளனர்.

நேற்று இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இடம்பெற்றுள்ளது. இன்று காலையிலிருந்தே டுவிட்டர் தளத்தில் இசை நிகழ்ச்சியைப் பற்றி கருத்துகள் பரவலாகி வருகின்றன.

இசை மழையில் நனையச் சென்ற ரசிகர்களுக்குக் காத்திருந்ததோ மறக்கவே முடியாத அனுபவம்.

மோசமான நிர்வாகத்தை அவர்கள் சுட்டினர். மேடையிலிருந்து தூரத்தில் அமர்ந்திருப்போருக்கு இசை கேட்கவில்லை. மிதமிஞ்சிய கூட்டம்.. அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

அவருடைய தீவிர ரசிகர்களாக இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இனி கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

நுழைவுச்சீட்டுகள் இருந்தும் சிலர் அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. சிலர் கோபத்தில் நுழைவுச்சீட்டுகளைக் கிழித்தனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!