இலங்கை

கொழும்பில் பெண்ணிடம் பணம் கேட்டு சிக்கிய போலி அதிகாரி – பொலிஸார் எச்சரிக்கை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்ணிடம் பணம் கேட்ட சந்தேக நபர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாபிம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்துவது தானே எனவும் சந்தேக நபர் பெண்ணிடம் கூறி 25,000 ரூபா பணம் கோரியுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரை கடவத்தை பொலிஸார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரின் போலியான அடையாள அட்டை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்