இந்தியா

வட இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் : 34 பேர் உயிரிழப்பு!

வட இந்தியாவில் நிலவுகின்ற கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பெரும் பகுதியில் நிலவுகின்ற வெப்பத்தின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என வைத்தியவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், கடுமையான உடல்நலப் பாதிப்பு கொண்டவர்கள் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

வியாழக்கிழமை இருபத்தி மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 11 பேர் வெள்ளிக்கிழமை இறந்தனர் என்று பல்லியாவின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்தார்.

பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்டதாக  அவர் கூறினார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!