உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் வெடி விபத்து ; நான்கு பேர் பலி, 12 பேர் காயம்
இன்று(24) வடக்கு உக்ரைன் நகரமான ஓவ்ருச்சில்(Ovruch) உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10:50 மணிக்கு பயணிகள் ஆவணச் சோதனையின் போது ஒரு நபர் வெடிக்கும் சாதனத்தை வெளியே எடுத்தபோது இந்த வெடிப்பு ஏற்பட்டது.
வெடிக்கும் சாதனத்தை எடுத்து வந்த 23 வயது நபர் வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ்(Kharkiv) நகரத்தைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்பில் அந்த நபர் உட்பட 29 முதல் 82 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களும் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் ஒருவர் எல்லைக் காவலர், மற்ற இருவர் கொரோஸ்டன்(Korosten) பகுதியைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)





