இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் விற்பனை – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் வகைகைளை விற்பனை செய்வதால் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரீம்கள் விற்பனை செய்யப்பட்ட இரு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

கொழும்பு இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளையே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த இரு கடைகளின் உரிமையாளர், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரீம் வகைகளின் காலாவதி திகதியை மாற்றி அதனை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்து வந்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு கடைகளிலும் இருந்த அனைத்து கிரீம் வகைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!