பரீட்சையில் தோல்வி – இமாச்சலப் பிரதேசத்தில் 18 வயது மாணவர் தற்கொலை

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பரீட்சை தேர்வில் தோல்வியடைந்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் போலீஸார் தெரிவித்தனர்.
18 வயது ரோஹித் சவுகான் பௌண்டா-சூரஜ்பூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் புரவலாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ரோஹித் இரண்டாவது முறையாக தோல்வியடைந்து மன அழுத்தத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பௌண்டா டிஎஸ்பி அதிதி சிங் தெரிவித்தார்.
மாணவன் பௌண்டா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
(Visited 16 times, 1 visits today)