உலகின் மிக நவீன மற்றும் பாதுகாப்பான கடவுசீட்டை வெளியிடும் ஐரோப்பிய நாடு
ஒஸ்ட்ரியா தனது புதிய தலைமுறை கடவுசீட்டை இந்த மாதம் வெளியிடும் என அறிவித்துள்ளது.
இது உலகின் மிக நவீன மற்றும் பாதுகாப்பான கடவுசீட்டுகளிவ் ஒன்றாக மாற்றும் நோக்கத்தில் உள்ளது.
ஒஸ்ட்ரியாவில் உள்ள கிட்டத்தட்ட 900 நகராட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் புதிய கடவுசீட்டு விண்ணப்பிக்க நாட்டு மக்கள் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடவுசீட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டபோது அடையாள பாதுகாப்பு மற்றும் போலி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று ஒஸ்ட்ரியாவின் உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கர்னர் தெரிவித்தார்.
(Visited 9 times, 1 visits today)