இந்தியா செய்தி

டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எத்தியோப்பியா ஏர்லைன்ஸ்

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்ததால், விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

போயிங் 777-8 ரக விமானம் இன்று அதிகாலை 3 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

“விமானத்தில் புகை வந்தது.. விமானத்தில் இருந்த பயணிகளில் பலர் அச்சம் அடைந்தனர்,” என்று அவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் 240-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!