ஐரோப்பா

கிரீஸில் ஆடுகளை பாதித்த நோய் தொற்று – 16,500க்கும் அதிகமான ஆடுகளுக்கு பரிசோதனை

கிரீஸில் ஆடுகளை பாதித்த நோய் தொற்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

16,500க்கும் அதிகமான ஆடுகளுக்கு ‘goat plague’ எனும் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 9 ஆடுகளுக்கு அந்த நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மற்ற ஆடுகளுக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

ஆடுகளைப் பாதித்த நோய் பற்றி முதலில் ஜூலை 11ஆம் தேதி தெரிய வந்தது. இதுவரை பாதிக்கப்பட்ட சுமார் 2,500 ஆடுகள் கொல்லப்பட்டன.

கிருமித்தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்க கிரீஸ் முனைகிறது.

வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக 120,000 ஆடுகள் பரிசோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!