இலங்கை

“EPF மற்றும் ETFஐ வெளிநாட்டில் முதலீடு செய்ய ஆலோசனை!

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றில் உள்ள பணத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (04.10) உரையாற்றிய அவர், மேற்படி முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,  எதிர்கால நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் EPF மற்றும் ETF இரண்டையும் ஒரு சுயாதீன சபையின் கீழ் கொண்டு வரும் என்றும்  கூறினார்.

“EPF மற்றும் ETF இரண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்த அவர்,  மற்ற சுயாதீன நிதிகளும் அதில் வர வேண்டும் என்றும்  அந்தப் பணத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவை நாட்டிலுள்ள மக்களின் சேமிப்பு எனக் கூறிய அவர், வெளிநாடுகளிலும் முதலீடு செய்ய அனுமதிப்போம். விடுங்கள் என்றும் இது பற்றி நாம் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!