செய்தி விளையாட்டு

ENGvsIND – மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

திலக் வர்மா 18 ரன்கள், சுந்தர் 10 ரன்கள், அக்சர் படேல் 15 ரன்கள், துருவ் ஜுரெல் 2 ரன்கள் என ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார்.

(Visited 35 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி