இலங்கை

திருகோணமலை- கங்குவேலி குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் விசனம்

திருகோணமலை- கங்குவேலி குளத்தின் பகுதிகள் சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்குவேலி குளத்தினுள் சிலர் அத்துமீறி விவசாயம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் குளத்தின் பகுதிகள் சேதமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்பை தடைசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குளத்திற்குள் சிலர் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளத்தின் அணைக்கட்டுகளை சேதமாக்கி வருவதாகவும் கால்வாய்களை வெட்டி சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், சம்மேளன உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு ஆளுநரின் பணிப்புரைக்கமைய திருகோணமலை பிராந்திய நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளரையும் சந்தித்து உரையாடியதாகவும் குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இக்குளமானது 2019ஆம் ஆண்டு 24 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரிடம் முறையிட்டபோதும் இது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

அத்துடன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடைசெய்து இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கங்குவேலி திருக்கரைசயம்பதி விவசாய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content