வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு!

இலங்கைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிபத்திரங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சுமார் 41 நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு பத்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ் வருத்தில் 03 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றதென அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)