இலங்கை

கொழும்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!

கொழும்பில் உள்ள புகையிரத  ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த புகையிரத தளங்களில்  இருந்து பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாளைய (12.09) தினம்  புகையிரத வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறையை திருத்தியமைத்து, ஏறக்குறைய 5 வருடங்களாக தாமதமாகி வரும் தர பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குமாறு கோரியே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!