ஐரோப்பா

ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு உள்துறை அலுவலகம் அவரசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதால் அந்நாடு மீண்டும் மாஸ்க் விதிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மருத்துவ அமைப்புகளில் மாஸ்க் அணியும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், குறிப்பாக மருத்துவ அமைப்புகளுக்குச் செல்லும்போது மாஸ்க் அணியவேண்டும் என்றும், மாஸ்க் விதிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்ளுமாறும், தொற்றிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ளுமாறும், பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாஸ்க் விதியை மீண்டும் அறிமுகம் செய்யும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!