இலங்கை

கொழும்பில் எட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

கொழும்பு மாநகர சபைக்குள்பட்ட 8 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும், குறித்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி குடியிருப்புகளை இடிக்க முன்வந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை குடியிருப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை குடியிருப்புத் திட்டம், கம்கருபுற குடியிருப்புத் திட்டம், B36 மாளிகாவத்தை குடியிருப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம்.என் குடியிருப்புத் திட்டம் மற்றும் மிஹிந்து மாவத்தை குடியிருப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குடியிருப்புத் திட்டங்களின் ஆளுகை அதிகாரியான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை அந்த குடியிருப்புத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!