இலங்கை

எஹலியகொடையில் இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : 20 பேர் காயம் – ஐவர் கவைலக்கிடம்!

எஹலியகொடையில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இன்று (26.09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பேருந்தின் மீது மற்றுமொரு சொகுசு பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், சொகுசு பேருந்து முன்னோக்கி தள்ளப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் சம்பவத்தின் போது வீதியோரம் நடந்து சென்ற பாதசாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!