கல்வி மறுசீரமைப்பு அவசியம்: மேர்வின் சில்வா வலியுறுத்து!
இலங்கையின் கலாசாரத்துக்கே உரித்தான வகையில் கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றம் வந்திருந்த மேர்வின் சில்வாவிடம், நீதிமன்ற வளாகத்தில் வைத்து கல்வி மறுசீரமைப்பு பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும்.
சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்பு பற்றி ஆலோசனை பெறவேண்டும்.
எனவே, கல்வி மறுசீரமைப்பை ஒரே நாளில் செய்ய முடியாது. முறையாக அதற்குரிய பணி இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” – என்றார்.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




