ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு சற்று முன்பு ஒரானா பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இவ் நிலநடுக்கமானது  10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும்,  விக்டோரியா வரை   உணரப்ட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இன்று (13.09) அதிகாலை மேல் ஹண்டரில் உள்ள மஸ்வெல்புரூக் அருகே 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

ஆழமான ஓரானா நிலநடுக்கத்தைப் போலன்றி, இது மேற்பரப்புக்கு மிக அருகில் இருந்தது, 3 கிலோமீட்டர் ஆழத்தில் மட்டுமே தாக்கியது எனவும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் நிலநடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித