ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு முறை பதிவான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.90 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.99 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று மதியம் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)





