இந்தியா செய்தி

காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் அதிர்வுகள் ஸ்ரீநகர், லே மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், சுமார் 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் மற்றும் லடாக் தவிர, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!