ஆசியா செய்தி

தைவான் உலுக்கிய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம் – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்கள்

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 9 பேர் மாண்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

25 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அது என்று தைவானின் நிலநடுக்கக் கண்காணிப்பு அமைப்பு சொன்னது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வில்லியன் லாய் (William Lai) நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

அங்கு இரவுமுழுதும் பணிபுரிந்துகொண்டிருக்கும் மீட்புக் குழுவை அவர் சந்தித்துப் பேசினார்.

87,000துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஹுவாலியென் (Hualien) மலைப்பகுதியில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 120 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அவர்களில் சுமார் 80 பேர் சுரங்கப்பாதைகளில் அகப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!