ஐரோப்பா

ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் E3 நாடுகள்!

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தவறினால், அதன் மீது மீண்டும் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளன.

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்காவிட்டால், முந்தைய தடைகள் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்ற “ஸ்னாப்பேக்” பொறிமுறையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக E3 எனப்படும் மூன்று நாடுகளும் தெரிவித்தன.

ஈரான் ஆகஸ்ட் மாத இறுதி வரை பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க முன்வந்ததாக அந்நாடுகள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் இது தொடர்பில் ஈரான் பதிலளிக்கவில்லை.

புதிய தடைகள் விதிக்கப்பட்டால் அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரானின் நாடாளுமன்றம் விலகத் தயாராக இருப்பதாக ஈரானிய சட்டமன்ற உறுப்பினர் மனோசெர் மொட்டாகி தெரிவித்துள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்