இலங்கை

சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்தவில் வசிக்கும் 134 குடும்பங்களும், மஹகந்த பிரிவில் 23 குடும்பங்களும், மேல் மகல்தெனிய பிரதேசத்தில் 84 குடும்பங்களும்,   மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஊவா பரணகம உடுஹாவர பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் பின்னர் அப்பகுதி வயல்களில் கும்புருவலி பனி போன்று வெண்குமிழ்கள் கொண்ட பொருளொன்றை காணக்கூடியதாக உள்ளது.

அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்திற்குப் பொறுப்பான வளிமண்டலவியல் நிபுணர் திரு.மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்