உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் 4 வயது மகனை கொன்ற நபர்
உத்தரப்பிரதேசத்தில்(Uttar Pradesh) குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது நான்கு வயது மகனை அடித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சூரியவான்(Suriyawan) பகுதியில் உள்ள குவாலி(Kuvali) கிராமத்தில் இரவு இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ராம்ஜி வான்வாசி(Ramji Vanvasi) குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த தனது 4 வயது மகன் விகாஸை(Vikas) தூக்கி பல முறை தரையில் அடித்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் குழந்தைக்கு முதலுதவி அளிக்க முயன்றனர், இருந்த போதிலும் குழந்தை காயங்களால் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் பாட்டி புகார் அளித்ததை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.





