இலங்கை செய்தி

பேரிடர் சூழல் : 01 மில்லியன் இழப்பீடு அறிவிப்பு – பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் ஒத்திவைப்பு!

கனமழையால் ஏற்பட்ட  பேரிடர் சூழ்நிலையால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) இதனை அறிவித்துள்ளது.

இதன்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பணம் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பேரிடர் சூழ்நிலை காரணமாக வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைமை கொறடா கயந்த கருணாதிலக  தெரிவித்துள்ளார்.

குறித்த விவாதங்கள்  டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!