ஆஸ்திரேலியா

சிட்னியிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – அவசரமாக தரையிறக்கம்

சிட்னியில் இருந்து ஒக்லாந்துக்கு புறப்பட்ட குவாண்டாஸ் விமானம் மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதியதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை ஒக்லாந்துக்கு வருவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு QF141 விமானம் இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டது.

இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பறவைகள் மோதியதால் விமானத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதும், பயணிகளுக்கோ, பணியாளர்களுக்கோ காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதும் இதுவரை வெளியாகவில்லை.

விமானத்தில் உள்ள பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஆக்லாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக குவாண்டாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!