தமிழ்நாடு

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் போராட்டம்

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் தடுப்பையும் தாண்டி முற்றுகையிட முயன்றதால் குண்டுகட்டாக தூக்கி பொலிஸார் கைது செய்தனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டி ஒய் எப் ஐ சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI அமைப்பைச் சார்ந்தவர்கள் திடீரென சுங்கச்சாவடியை முற்றுகைட்டு உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர் அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content