ஆசியா

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை – சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி – தர்மன் பேச்சு

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோபின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

புதிய அதிபரைத் தேர்வுச் செய்வதற்காக நடந்த பொதுத்தேர்தலில், இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பேசிய தர்மன் சண்முகரத்னம், “இவ்வளவு பெரிய வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை. இது அரசியல் தேர்தல் அல்ல என்பதை உணர்ந்து, அனைத்து தரப்பு மக்களும் அறிவுப்பூர்வமாக வாக்களித்துள்ளனர். தன் மீது நம்பிக்கை வைத்து கட்சி சார்பற்ற நபராகத் தன்னை தேர்வு செய்தது ஊக்கமளித்திருக்கிறது. மக்களுக்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!