இலங்கை

இலங்கை: தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் தற்போது பிணையில் உள்ள தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிணை பெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயற்பட்டதாக தென்னகோன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரையும் குறித்த திகதியில் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வந்தார்.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD), வெலிகம பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளை உள்ளடக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் CCD அதிகாரி ஒருவர் மரணம் மற்றும் மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார், 20 நாட்கள் கைது செய்யாமல் தப்பித்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

(Visited 3 times, 3 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்