இலங்கை

உயர் அதிகாரிகள் இருவருக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு!

கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ்வரும் நிறுவனமொன்றின் உயர் அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.

அரச தலைவர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காரணமாக இந்தப் பயணத்தை அங்கீகரிக்க முடியாது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் வணிக வகுப்பில் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான விமான அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அரச நிதியை வெளியிட முடியாது என்பதையும் அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.

எனினும், குறித்த அதிகாரிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.

தாங்கள் வணிக வகுப்பில் பயணம் செய்ய விரும்பவில்லை என்றும், சொந்த வளங்களைப் பயன்படுத்தி பொருளாதார வகுப்பில் பயணிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், அத்தகைய பயணம் தேவையற்றது என்ற அடிப்படையில், அவர்களின் மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!