பொழுதுபோக்கு

குழந்தையை மார்போடு அணைத்த தீபிகா படுகோன்…. வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘கல்கி AD 2898’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தீபிகா படுகோன் சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை கடந்த ஆண்டு அறிவித்தார்.

அவ்வப்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து தீபிகா – ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், தற்போது குழந்தையோடு தீபிகா படுகோன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய செல்ல மகளை மார்போடு அணைத்து கொண்டு… தீபிகா படுகோன் குழந்தையை ரசிக்கிறார்.

(Visited 29 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்