ஐரோப்பா

வாக்னர் கூலிப்படைத் தலைவர் மரணம் – பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் விமான விபத்தில் மரணம் அடைந்ததற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறுவதனை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்க்கோ (Alexander Lukashenko) கூறியிருக்கிறார்.

பிரிகோஷினைப் படுகொலை செய்ய புட்டின் உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக பிரிகோஷின் நடத்திய கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஏற்படுவதற்கு லுக்கஷென்க்கோ உதவியிருந்தார்.

பிரிகோஷினின் விமானம் ரஷ்யாவில் எவ்வாறு விழுந்து நொறுங்கியது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

அந்த விமானத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. விமானத்தை நோக்கி ஏவுகணை பாய்ச்சப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை அது நிராகரித்தது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்