பிரிட்டன் பாதுகாப்புத்துறை குறிவைத்து சைபர் தாக்குதல்

பிரிட்டன் பாதுகாப்புத்துறையை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், ராணுவ வீரர்கள் சிலரின் வங்கி கணக்கு விவரங்கள், வீட்டு முகவரிகள் போன்ற தகவல்கள் திருடுபோயிருக்கலாம் என கூறப்படுகின்றது.
ராணுவத்தினருக்கு ஊதியம் வழங்குவதற்காக நியமக்கப்பட்டிருந்த நிறுவனத்தில் உள்ள கணிணிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
இதையடுத்து இணைய வசதிகள் உடனடியாக துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். ராணுவ வீரர்களின் ஊதிய விவரங்களை தெரிந்துகொண்டு, பின்னர் அவர்களுக்கு பணத்தாசை காட்டி ராணுவ ரகசியங்களை திருட சீனா இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் பிரிட்டன் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)