இலங்கை செய்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT Scan பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!