ஆசியா

கோடைகால அலைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் கழிவு நீரில் கொவிட்-19 கிருமி அளவு அதிகரிப்பு

தென்கொரியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கழிவு நீரில் கொவிட்–19 கிருமியின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று தெரிவித்தனர்.இந்த நிலை ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கழிவுநீரில் கொவிட்-19 கிருமியின் அளவை அளவுகோலாகக் கொண்டு அந்நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிக்கப்படுகிறது.இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்கும் ஆகஸ்ட் மாத தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தென்கொரியக் கழிவு நீரில் கொவிட்-19 கிருமியின் அளவு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தென்கொரியாவில் உள்ள 14 மாநிலங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்கொரியாவில் தற்போது கோடைக்காலம்.இந்நிலையில், கொவிட்-19 அலையால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.கிருமிப் பரவல் மெதுவடைவதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

260,000 கொவிட்-19 நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைத் தயார்ப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான சிகிச்சை நாடெங்கும் தயார்நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.அத்துடன் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளும் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரிப்பைத் தென்கொரிய அரசாங்கம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சூ கியூ ஹோங் கூறினார்.கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏற்றம் கண்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content