ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவிக்கு ஸ்பெயின் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெகோனா கோம்ஸ் தனது பதவியைப் பயன்படுத்தி வணிக ஒப்பந்தங்களில் செல்வாக்கு செலுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாட்ரிட்டை தளமாகக் கொண்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோம்ஸ் இன்னும் இந்த வழக்கை பகிரங்கமாக பேசவில்லை, ஆனால் சான்செஸ் தனது சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசாங்கத்தை சேதப்படுத்தும் “பிரச்சாரம்” என்று அழைத்தார்.
ஸ்பெயின் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிலார் அலெக்ரியா. கோம்ஸ் சம்பந்தப்பட்ட விசாரணை “பொய்கள் மற்றும் தவறான தகவல்களின்” அடிப்படையிலானது” என்று தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)