ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூர் தமிழரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அவரை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஜூலை 12- ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 5- ஆம் திகதியன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைப்பின் இயக்குநர் என்னை சந்தித்தார்.

அப்போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதும் மற்றும் வேறு பலர் மீதும் அதிகாரப்பூர்வமாக விசாரணைத் தொடங்குவதற்கு அனுமதிக் கோரினார்.

அதைத் தொடர்ந்து, ஜூலை 6- ஆம் திகதி அன்று சிபிஐபி இயக்குநருக்கு எனது ஒப்புதலை அளித்தேன்.

இதையடுத்து, ஜூலை 11- ஆம் திகதி அன்று முறையான விசாரணை தொடங்கியது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தற்போது சிபிஐபி விசாரணையில் உதவி வருகிறார்.

இந்த விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன். அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் விடுப்பில் இருக்கும் போது அவர் வகித்து வந்த போக்குவரத்துத்துறையை மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் தற்காலிகமாகக் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்