ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – வீட்டு வைத்தியம் எடுத்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவி வருகின்ற நிலையில், மக்கள் வீடுகளில் சிகிச்சை எடுப்பதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் XFG மற்றும் XFG.3 தொற்றுக்களின் புதிய திரிபுகள் பரவி வருகின்றன. அதேபோல் ஸ்ட்ராடஸ் (Stratus) மற்றும் நிம்பஸ் ( Nimbus ) (NB. 1.8. 1) போன்ற தொற்றுக்களும் பரவலாக காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தொற்றால் உடலில் ஏற்படும் கடுமையான வலிக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது பிரித்தானியாவில் மாறிவரும் காலநிலை காரணமாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் ஏற்பட வாய்புள்ளதாகவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

கரகரப்பான குரல் மற்றும் தொண்டையில் கடுமையான வலி இருந்தால் வைத்தியர்களின் ஆலோசனையை நாட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரகரப்பான குரல் மற்றும் குறிப்பிடத்தக்க தொண்டை வலியுடன் போராடினால், அசௌகரியத்தைப் போக்க தேனுடன் சூடான பானம் தயாரிக்க மக்கள் ஆசைப்படலாம்.

இது  குறுகிய கால நிவாரணத்தை அளிக்கக்கூடும் என்றாலும், இந்த வீட்டு வைத்தியம் இந்த அறிகுறிகளைக் குறைக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்