இலங்கை

இலங்கை : புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பரீட்சைதாள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் விரைவில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், உதவி கண்காணிப்பாளர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் சமூக ஊடகக் குழுவொன்றில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தரம் 5 பரீட்சையின் முதல் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சுமார் 100 பெற்றோர்கள் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் போலீசில் அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!