இலங்கை

இங்கிலாந்தில் உயிரிழந்த டினாலின் மர்ம மரணம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்..

இங்கிலாந்தில் வசித்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வௌியாகியுள்ளன.

க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் பாடசாலையில் கல்வி கற்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார்.

இந்தக் கனவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அவர் மரணமானார்.டினாலின் மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தன.

பிரித்தானியாவில் இலங்கை மாணவர் மர்ம மரணம்! – Athavan News

தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுமாறு சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவிலிருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலம் உரிய கப்பம் கோரிய நபர், அவருக்கு இரண்டு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதற்கு முன்னர் இவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content