இலங்கை செய்தி

சாணக்கியனை படுகொலை செய்ய சதி

தம்மை கொலை செய்ய இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு தகவலொன்றை மேற்கோள்காட்டி லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர்,

லங்கா ஈ நியூஸ் என்ற செய்தி தளத்தில் என்னை படுகொலை செய்ய திட்டமிடடுள்ளதாக சர்வதேச புனவாய்வு தகவலொன்றின் அடிப்படையில் செய்தியொன்று கடந்த 20ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

ஆளுங்கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவர்தான் இந்த சதியின் பின்புலத்தில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த செய்தி தொடர்பில் பரிசீலனை செய்து சபாநாயகர் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

அந்த செய்தி உண்மையா அல்லது பொய்யா எனத் தெரியவில்லை.

ஆனால், குறித்த நபர் பல்வேறு படுகொலைகளுடன் குறிப்பாக எம்.பிகளின் படுகொலையுடன் கூட தொடர்புடையவர்கள் என்பதால் பரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!