இலங்கை

யாழ்ப்பாணத்திற்காக ஆரம்பமாகியுள்ள சுற்றுலா ரயில் சேவை ஆரம்பம்

வடக்குக்கான ‘யாழ் நிலா’ சொகுசுரக சுற்றுலா ரயில் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இந்த ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் புறப்படவுள்ள ‘யாழ் நிலா’ ரயில் சேவை மறுநாள் அதிகாலை 5.52 அளவில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன் இரவு 9.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5.36 அளவில் கல்கிசை ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!