இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை விமான சேவையுடன், வாரத்தில் நான்கு நாட்கள் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று, பன்னிரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு சிறிய விமானம், செஸ்னா 208, பயணத்தில் இணைந்துகொண்டது.

ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

மேலும் இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஏழு கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும் எனவும் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!